144.எப்படி இருந்த நான்… !
தல புராணம் …7
எனது பழைய பதிவொன்றில் மதுரையின் பழம் பெருமை வாய்ந்த ஒரு கட்டிடத்தினைப் பற்றி எழுதியிருந்தேன். எழுதி இரண்டு மூன்று மாதங்களில் அந்த இடத்தைத் தாண்டி செல்லும்போது பார்த்தது ஒரு கணம் திடுக்கிட வைத்தது. ‘எப்படியிருந்த நான் இப்படி ஆயிட்டேன்’ அப்டின்னு சோகமா சொன்னது மாதிரி இருந்தது. . அந்தக் காலத்துப் பெருமையெல்லாம் போய் - சிலரின் அந்திக் காலத்தில் உடம்பெல்லாம் வற்றிப் போய், துருத்திக்கொண்டிருக்கும் முன்பற்க
ளோடு பரிதாபமாகத் தோற்றமளிப்பார்களே அது மாதிரி - முன்னால் இருந்த அந்த முகப்பு -facade - மட்டும் இடிக்கப்படாமல், அதன் ஜன்னல்கள் வழியே தெரியும் உள்வெற்றிடம் வெட்டவெளியாய் தெரிய நின்று கொண்டிருக்கிறது.
எதற்கும் அந்தப் பதிவில் பதிவில் போட்டிருக்கும் படத்தையும் அதன் பழம் பெருமையையும் பார்த்துக்கொள்ளுங்களேன்.
ஒரு கொசுறு சேதி: ஒரு காலத்தில் ஊரிலேயே பெரிய தங்குமிடமாக இருந்த போது, இதன் அருகில் ஒரு ‘ஃபேமஸ்’ இட்லிக்கடை இருந்தது என்று எழுதியிருந்தேன். இன்றும் இந்தப் பாழடைந்த கட்டிடத்தின் எதிர்தாற்போல் சுப்ரமணிய சாமி புகழ் முருகன் இட்லிக் கடை உள்ளது. இந்தப் படம் எடுக்கும்போது அந்தக் கடையில் உள்ளவர் ஒருவரிடம், ‘இந்த இடத்தில என்ன வரப் போகுதுன்னு’ கேட்டேன். ‘ஓணர் இன்னும் இதை விற்கவில்லை; அதனால என்ன வரப்போகும்னு தெரியாது’ என்று சொல்லிவிட்டு, ‘என்ன சார், நீங்க பத்திரிக்கைகாரரா?’ என்று கேட்டார்.
யாரும் வாங்கிப் போடறதுன்னா போடலாமேன்னு இந்த ‘டிப்ஸ்’ கொடுத்தேன்
March 18th, 2006 at 11:15 pm
தருமி சார் கண்ணதாசன் சொல்லுவாரே அந்த லாட்ஸா இது?!
March 19th, 2006 at 4:19 am
பார்ட்னர்,
மாடர்ன் லாட்ஜ் கதைய கேட்டதும் பாவமா போச்சு.மாடர்ன் லாட்ஜுன்னு பேரு வெச்சா போதுமா?மாடர்னா போட்டி போட்டு ஓடிருக்க வேண்டாமா?
March 19th, 2006 at 4:54 pm
Oru kalaththil koottam neriyum idam ippothu ippadiya? Maduraiyin mugam modern aga mari vittathu.Now she is a modern girl.
April 8th, 2006 at 5:16 am
[…] ‘எப்படி இருந்த நான் இப்படி ஆய்ட்டேன்’ என்று விவேக் ஸ்டைலில் மதுரை நகரம் புலம்பினால் எப்படி இருக்கும்? தருமியின் இந்தப் பதிவு போல இருக்கும்… […]