It was all crude fate - with great enthu i jumped form blogspot to wordpress, pulled by the chance to add pictures to decorate my webpage, and add features like ‘categories’ and all that… but what an incompatibility ! Thamizmanam is not compatible. So the very next step - divorce ! and the pity is I have to ‘go back’ to the first one I dumped!
anyway it is a happy re-marriage again - with the earlier partner and that is : http://dharumi.blogspot.com . in case you are one of the thousands of my avid readers (sic!) visit this page. if not…get lost !
Sep 15 2008 07:43 pm |
Uncategorized |
1 Comment »
பதிவர்: 1
வெளியூர் பதிவர் ஒருவர்; பின்னூட்டங்கள் மூலமாக ரொம்பவே தெரிஞ்சவர். மதுரை வரப் போகதாகவும், வந்ததும் தகவல் சொல்வதாகவும் தொலைபேசியில் சொன்னார். சொன்னது போலவே மதுரை வந்தபின் சொன்னபடி தொலை பேசினார். காலம் சிறிதேயிருந்ததால் நானே அவரை அவர் தங்கியிருக்குமிடம் சென்று பார்ப்பதாகச் சொல்லியிருந்தேன். பேசும்போது வேறொரு பெயரைச் சொன்னார். நான் திகைத்ததை ஊகித்து, மறு முனையிலிருந்து விளக்கம் வந்தது: நானேதான் அது; அதுவே என் உண்மைப் பெயர் என்றார், நேரில் பார்த்தபோது விளக்கம் தொடர்ந்தது. தான் உண்மைப் பெயரைச் சொல்லுவதில்லையென்றும்,
அந்தப் பெயரில் எந்த user id-யும் கிடையாது என்றும் சொல்லி என்னை வியப்பில் ஆழ்த்தினார். போட்டுக்கிற போட்டோகூட ‘ஜூஜா’ தான் என்றார்!
அவ்வளவு ‘ஆட்டோக்களா’ இருக்கு நம்ம ஊரில…?
“கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் உண்மையல்ல″
பதிவர்: 2
அடுத்த பதிவர். இவரும் பின்னூட்டங்கள் மூலம் பழகியவர். என்னைப் பார்த்ததும் எல்லோரையும் மாதிரி, ‘என்னங்க, எப்படியிருக்கீங்க? நல்லா இருக்கீங்களா’ அப்டின்னெல்லாம் ஒண்ணும் கேட்காம எடுத்த எடுப்பிலேயே ‘உங்க பதிவில் போட்டிருக்கிற உங்க புகைப்படம் எடுத்தது யார்?’ என்று கேட்டார், நானும் அப்பிராணியா விவரம் சொல்லிட்டு ‘எதுக்கு அதையெல்லாம் கேக்குறீங்க’ அப்டின்னு கேட்டேன்.
‘இல்ல, உங்கள மாதிரி கொஞ்சம்கூட இல்லாம எப்படி நல்லபடியா வேற மாதிரி படம் எடுத்தாருன்னு தெரிஞ்சுக்கத்தான்’ என்றார், நான் ஒரு குழல்விளக்கா? டக்குன்னு புரியலை. ‘ஏங்க, அந்த படத்தில இருக்கிறதைப் பார்த்தா என்ன மாதிரி தெரியலையான்னு’ கேட்டேன். அதுக்கு அவர்: ‘அந்தப் படம் மாதிரி நீங்க இல்ல; ஆனா அந்தப் போட்டோகிராபர் நல்ல தொழில் தெரிஞ்சவர் மாதிரிதான் இருக்கு’ அப்டின்னார்.
அதுக்கப்புறம்தான் அவர் என்ன சொல்ல வர்ரார்னு புரிஞ்சுது !
Appearances are deceptive; photographic appearances could be all the more deceptive - அப்டின்னு ரெண்டு பேருக்கும் புரிஞ்சுது.
பதிவர்: 3
நடு உச்சி எடுத்து, கலைஞர் ஸ்டைலில் (அதாவது அந்தக் காலத்துக் கலைஞர்!) உச்சி வகிடெடுத்து தாடி மீசையுடன் ஒரு படம் போட்டு இதுதான் நான் என்று பதிவில் காண்பிச்சிக் கிட்டுருந்த ஒரு பதிவரைப் பார்த்தேன். அந்தப் படத்துக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லாமல் “லால் சேட்ஜியின் சோட்டா பச்சா” மாதிரி இருந்தார் யெஸ். பால பாரதி. முன்ன பின்ன பார்த்ததில்லை; பின்னூட்டங்களில் கூட சந்தித்தது கிடையாது. ஆனால் மனுஷன் பார்த்ததும், ரொம்ப நாள் பழகிய தோரணையில் மிக அண்மைக்குள் என்னை நினைக்க வைத்து விட்டார் - மொபைலில் பேசிக்கொண்டேயிருந்தும் கூட ! (அந்த பக்கம் பாலபாரதி யாருகிட்டையோ கடலை, போன்லெயே வறுத்துகிட்டு இருந்தாரு(நாராயனா). - இது நான் சொல்லலைங்க; அவரது தோஸ்த் / மாப்பிள்ளை சொன்னது; ஜஸ்ட், மேற்கோளிட்டேன். அவ்வளவே!
பதிவர்: 4
அடுத்த பதிவர்: ஞானவெட்டியான். திண்டுக்கல்லில் இருந்து மதுரை புத்தக விழாவுக்குச் செல்லும் வழியில் எங்கள் மதுரை புறநகர்ப் பகுதியைத் தாண்டித்தான் போகணும். சொல்லியிருந்தார். மெயின் ரோட்டில் காத்திருந்து வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு சென்றேன். இருவரும் சாப்பிட்டுவிட்டு ஒன்றாக புத்தக விழா செல்ல நினைத்திருந்தேன். சொந்த வேலை காரணமாக அது முடியாது போக, அவர் சாப்பிடிருந்துவிட்டு, கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு விடை பெற்றார்.
நுணுக்கமான மனிதர். சாப்பிடும்போது கூட அது தெரிந்தது. கொஞ்சூண்டுன்னா கொஞ்சூண்டுதான் சாப்பிட்டார். ஆனல் அதைப் பிரித்து ‘நொறுங்க தின்னா நூறு வயசு’ன்னு சொல்லுவாங்களே அத மாதிரி ஆர அமர சாப்பிட்டார்.
அடுத்த முறை காசி செல்லும்போது என்ன செய்ய வேண்டுமென சொல்லியனுப்பியிருக்கிறேன்.
பதிவர்: 5
மொத்தமே ஆயிரம் பதிவர்களுக்குள்தான் இருக்கும்போலும். இருப்பினும் அதிலும் எப்படி ‘மிஸ்’ பண்ணக் கூடாத சில பதிவர்களை இதுவரை ‘மிஸ்’ செய்திருக்கிறேன் என்பது சென்னையில் கூடிய பதிவர் கூட்டத்தைப் பற்றிய பதிவுகளைப் படித்தபோதுதான் தெரிந்தது. ‘சொந்த செலவில் சூன்யம் வச்சுக்கிறது’ என்பதன் மூல ஆசிரியர் அவர்தான் என்று கேள்விப்பட்டும் கூட அவரது பதிவைப் படிக்க முந்தியே தோன்றாம போச்சு. இப்போ அவரது பதிவுகள படிச்சிட்டு, அதிலயும் - “”அடப்பாவி நீ வெறும் செவன் அப்பே ஒத்துகாதா ஆளா” - அப்டின்னு எழுதியிருக்கறத படிச்சதும் ஒரேயடியா அவரது பதிவுகள் எல்லாத்தையும் ஒரே மூச்சில படிச்சேன். மனுஷன் பின்றாரு. என்ன நகைச்சுவை…சும்மா அப்டியே வெள்ளமால வருது. வாழ்க வரவனையான்; வளர்க அவர் எழுத்து.
ஆனா ஒண்ணு…’வாட்டர்’ பத்தி இவ்வளவு ஓப்பனா எழுதறாரேன்னு ஒரு சந்தேகம் வந்திச்சி. அடிக்கடி வேற அதப்பத்தி எழுதறாரேன்னு தோணிச்சி. ஒரு வேளை இந்த ஆளு playing with the psyche of readers -அப்டின்னு இருக்குமோன்னு தோணிச்சுது, அதாவது இந்த ஆளு teetotaller -ஆக இருக்கணும்; சும்மா ஒரு ‘இதுக்காக’ இப்படி ‘ரூட்’ உடுறது. லொல்லலாங்காட்டி… ‘வாட்டர்’ போடறவுங்க எல்லாம் இப்படியா அடிக்கடி ‘வாட்டர்’ பத்தி பேசுறாங்க. இப்போ பாருங்க நான் என்னைக்காவது ‘வாட்டர்’ பத்தி பேசுறேனா, என்ன?
Jan 05 2007 08:35 pm |
Uncategorized |
No Comments »
இன்று (18.08.’06) மதியம் ஒன்றரை மணி சன் டிவி செய்திகளில் ஒன்று: சென்னையில், விமான நிலையம் அருகில் விளம்பரப் பலகைகளுக்காகப் பொருத்தப்பட்டிருக்கும் மின் விளக்குகள் விமானப் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருப்பதாக விமான நிலையம் கொடுத்த புகாரில், அந்த விளக்குகளுக்குத் தொடர்புகள் மாநகராட்சியால் துண்டிக்கப்பட்டுள்ளன. ஆனால் அதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் விளம்பரதாரர்களால் போடப்பட்ட வழக்கு எடுத்துக் கொள்ளப் பட்டு, மாநகராட்சிக்கு உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. அதுவரைகூட சரி. இரண்டு பக்கம் கேட்டு நீதி வழங்க வேண்டியதுதான்.
ஆனால், அதுவரை விளக்குகளைத் துண்டிப்பதற்கு இடைக்காலத் தடை விதித்துமுள்ளது.
விளக்குககளைத் துண்டிப்பதற்கான காரணம்: அதிகப் படியான ஒளியால் ஏற்படக்கூடிய குளறுபடியை நீக்க; விமானப் பாதுகாப்பிற்காக. இதைக்கூட எண்ணாமல் தற்காலிகத் தடைவிதிக்கிறது நீதி மன்றம் என்றால், அந்த மாதிரி தீர்ப்பு வழங்கும் மேதாவிகளைத் தலைப்பில் சொன்னது போல் சொன்னால் என்ன தப்பு…? நான்கு நாட்கள் விளம்பரங்கள் விளக்கில்லாமல் இருந்துவிட்டால் என்ன குடிமுழுகிப் போகும்?
ஒருவேளை இந்த விளக்குகளின் அதீத வெளிச்சத்தால் ஏதும் அசம்பாவிதம் நடந்தால்…? Cann’t these judges fix up priorities first?
இந்த நீதிமன்றங்களும், அங்கிருந்து வரும் இது போன்ற தீர்ப்புகளும் பற்றி என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
Jan 05 2007 08:33 pm |
Uncategorized |
No Comments »
09.07.2006
இஸ்லாம் மதத்தைப் பற்றிய என் ஐயங்களை என் மதங்களைப்பற்றிய 7-ம் பதிவில் எழுப்பியிருந்தேன். பொதுவான சிலவற்றைப் பற்றிப் பேசிவிட்டு ‘இனி என் ஐயங்கள்’ என்று தலைப்பிட்டு 21 ஐயங்களைப் பட்டியலிட்டிருந்தேன். இதற்கு விளக்கமளிக்க வந்த பதிவுகளில் என் முதல் கேள்விக்குப் பதிலளிக்கப்பட்டுவிட்டது. நன்றி.
1.)பழைய ஏற்பாடு இரு (கிறித்துவம், இஸ்லாம்)மதத்தினருக்கும் பொது எனப்படுகின்றது. கிறித்துவர்களின் பைபிளில் ஆதாம் - ஏவாள் படைப்பைப் பற்றி சொல்லும்போது ஆணின் விலா எலும்பிலிருந்து பெண் படைக்கப்பட்டாள் என்பதை, இது ஓர் ஆணாதிக்க விளக்கம் என்று கூறியிருந்தேன். ஆனால், முஸ்லீம் எழுத்துக்களில் அந்த முதல் பெண்ணுக்குப் பெயரே இல்லை. பெயர் தரும் அளவிற்குக்கூட பெண்ணுக்கு முக்கியம் இல்லையோ? - இது என் கேள்வி.
(கேட்டிருக்கும் கேள்விகளில் இந்த முதல் கேள்வியை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். ஏனெனில் அக்கேள்விக்கு நண்பர்கள் பதில் கொடுத்துவிட்டார்கள். அந்த முதல் பெண்ணுக்கு ‘அவ்வா’ (AWWA) என்று பெயர் குரானில் சொல்லியுள்ளதாக விளக்கியுள்ளார்கள். விளக்கத்திற்கு நன்றி. )
இதன் பிறகு சில பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவைகளை நான் கேள்விகளாகவே பொதுவில் வைக்கவில்லை. நான் அறிந்தவரையில் சொன்ன சில காரியங்களுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளன. அவைகளில் சிலவற்றை ஏற்றுக்கொள்கிறேன். ஏனெனில் அவற்றைப் பொறுத்தவரை எனக்கு அவைகள் அவ்வளவு முக்கியமானவைகளாகத் தெரியவில்லை. .
1) குர்ஆன் குகையில் கொடுக்கப்பட்டதா? - குரான் எப்படி எங்கே கொடுக்கப்பட்டது என்பது எனக்கு முக்கியமாகப் படவில்லை. கொடுத்தவைகளாகக் கருதப்படுபவைகளில் எனக்கு வந்த ஐயங்களைத்தான் நான் தொகுத்திருக்கிறேன்.
2) முஹம்மது நபி எழுதப்படிக்கத் தெரிந்த வர்த்தகரா ? - சில கருத்து வேறுபாடுகள் உண்டென்று படித்ததைக் கூறியுள்ளேன். அவர் கற்றவரா கல்லாதவரா என்ற விவாதத்தை நான் வைக்கவில்லை. எப்படியிருந்திருந்தாலும் அது எனக்கு உடன்பாடே.
3) சில போர்களில் தோற்றது ஏன்? god is always on the side of bigger battalion என்று சொல்லப்படுவது நினைவுக்கு வந்தது!
4) இஸ்லாத்தில் பெண்களின் நிலை:
Zaynab bint Jahsh- ஜேனாப் என்ற இந்தப் பெண்மணி முகமதின் வளர்ப்பு மகனின் மனைவி; வளர்ப்பு மகன் விவாகரத்து செய்த பின் இப்பெண்ணை முகமது மணம் முடிக்கிறார் . - தருமி
இதுவும் நான் கேள்வியாக வைக்காத ஒன்று. ஆயினும், நான் சொன்னதையும், அதற்கு அளிக்கப்பட்டுள்ள பதிலையும் (கீழே கொடுக்கப்படுள்ளது) படித்துவிட்டு, படித்தவர்கள் அவர்களே ஒரு தீர்மானத்திற்கு வந்து கொள்ளட்டும். அதில் எனக்கு விவாதத்திற்கு இடமோ தேவையோ இல்லை. ஆனால், நிச்சயமாக எனக்கு இந்த விளக்கம் சரியானதாக இல்லை. வளர்ப்பு மகனின் விவாகரத்திற்குப் பின் அந்தப் பெண்ணையே வளர்ப்புத் தந்தை மணம் புரிவது தவறல்ல என்ற இந்த கூற்று எனக்கு வியப்பையே அளிக்கிறது.
“இதில் என்ன குற்றம் கண்டீர்? ஒரு பெண்ணை கணவன் விவாக ரத்து செய்தபின் இன்னொருவர் மறுமணம் செய்யக் கூடாது என்கிறீர்களா? அல்லது வளர்ப்பு மகன் உண்மையான மகனாவான் என்கிறீர்களா ?”
5) படைப்புக்கொள்கை - “இஸ்லாம் சொல்லும் படைப்புக் கொள்கை தவறு என்பது உங்கள் வாதமானால் , நீங்களே சொல்லுங்கள் மனிதன் எதிலிருந்து தோன்றினான் ? பகுத்தறிவு பெற்ற குரங்குகள்தான் தற்கால மனிதனின் மூதாதையர் என்றால், இன்னும் சில குரங்குகள் ஏன் பகுத்தறிவடைந்து மனிதனாகவில்லை?”
- இதற்கும் நான் பதில் சொல்லத் தயாரில்லை. முற்றிலும் குரானுக்கு எதிர்மறையான விவாதம் அது; முடிவிருக்காது; விவாதிப்பதில் எந்த பயனும் இருக்காது.ஆயினும் என் இரண்டாவது கேள்விக்குரிய பதிலாக இதை எடுத்துக் கொள்கிறேன்.
-. 3-வது கேள்விக்கு அது கிறித்துவ மத நூல்களில் நடுவில் ஏற்பட்ட மாற்றங்களையும், திரிபுகளையும் பொருத்தது என்று கூறப்படலாம். அதனையும் ஒதுக்கி விடுவோம்.
- 6-வது கேள்வி சுவனம் பற்றியது. நேரடி பதில் இதற்குக் கொடுக்கப்பட்டு விட்டதா என்பதை நடுநிலை நோக்கர்கள்தான் கூற வேண்டும். எனக்கு அந்தப் பதிலில் ஒப்புதல் இல்லை.
“56:22 (அங்கு இவர்களுக்கு) ஹூருல் ஈன் (என்னும் நெடிய கண்களுடைய) கன்னியர் இருப்பர்” அவர்கள் பெண்கள் என்பதானாலும், சுவனம் செல்லும் ஆண்களுக்கு “44:54 இவ்வாறே (அங்கு நடைபெறும்). மேலும் அவர்களுக்கு ஹூருல் ஈன்களை நாம் மண முடித்து வைப்போம்.” என்பதனாலும் - ஆண்களுக்கு இத்தகைய சுவனம் காத்திருக்கிறதென்றால் பெண்களுக்கு எப்படிப்பட்ட சுவனம் என்று கேட்டிருந்தேன். குதர்க்க விவாதம் என்று இதற்குப் பெயர் சூட்டப்பட்டு விட்டது !
ஆக, என் 21 கேள்விகளில், முதல் கேள்வி, கேள்வியே தவறானது என்று ஒப்புக்கொள்கிறேன். இரண்டாவது, மூன்றாவது, ஆறாவது கேள்விகளுக்குப் பதில் தரப்பட்டுள்ளன. அந்தப் பதில்களை நான் ஏற்றுக் கொண்டுவிட்டேனா என்பது வேறு விஷயம். 4-வது கேள்வி, அதன்பின் முக்கியமாக 5-வது கேள்வி - அது எனக்கு மிக முக்கியமாகப்படுகிறது. (இந்த வன்முறை கடவுளுக்கும்-மனிதனுக்கும் நடுவே வருவது ஆச்சரியம் மட்டுமல்ல; அதி பயங்கரமும் கூட.)மீதிக் கேள்விகளும் இருக்கின்றன.
இந்த நிலையில் புதிதாக ஒரு கேள்வியும் சேர்ந்து விட்டது. அதை பட்டியலில் சேர்த்து விடுகிறேன். திருப்திகரமான பதில் கிடைத்த முதல் கேள்வியை விட்டுவிட்டு இந்தக் கேள்வியை என் அந்தப் பழைய பதிவில் சேர்த்துள்ளேன். just an updating.
அந்தக் கேள்வி:
குர்ஆன் 25 : 68: ‘அவர்கள் எந்த உயிரையும் தக்க காரணமின்றி கொல்ல மாட்டார்கள்.(காரணத்தோடு கொல்லலாம் என்று பொருள் படுகிறதே?’ - கொலை செய்பவனுக்கு ஒரு காரணம் கண்டுபிடிப்பதா பெரிது?)
5:32: “நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” என்று இஸ்ராயீலுடைய மக்களின் மீது நாம் விதியாக்கினோம்.
5:33 அல்லாஹ்வுடனும், அவன் ரஸூலுடனும் போர் செய்து கொண்டு, பூமியில் குழப்பத்தை உண்டாக்கித் திரிபவர்களுக்குரிய தண்டனையானது அவர்கள் கொல்லப்படுதல், அல்லது அவர்கள் தூக்கிலிடப்படுதல்; அல்லது அவர்கள் மாறுகால் மாறுகை வாங்கப்படுதல் அல்லது அவர்கள் நாடு கடத்தப்படுதல்…
கிறித்துவத்தில் ‘கொலை செய்யாதே’ என்பது ஒரு கட்டளையாகக் கொடுக்கப்பட்டுள்ளது; சமணத்தில் நுண்ணுயிர்களைக் கூட கொல்லக் கூடாதென்ற தத்துவம்; பிறப்பொக்கும் எல்லா உயிரும் என்கிறது தமிழ்மறை; எல்லா உயிரும் ஒன்றே, உயிர்க்கொலை தவறு என்கிறது இந்து மதம். இந்த கோட்பாடுகளில் எந்த clasue, sub-clause-ம் கிடையாது, அதாவது இந்தந்த மாதிரி நேரங்களில் மட்டும் கொலை செய்யலாம் என்ற விலக்குகள் தரப்படவில்லை. கொலை என்பது ஒட்டுமொத்தமாக தவறு; பாவம் என்றுதான எல்லா மதங்களும் போதிக்கின்றன. இந்த இடத்தில், நாடுகளுக்கு நடுவில் நடக்கும் போர்களையும், மனிதர்களுக்கு நடுவில் நடக்கும் சண்டைகளையும் குழப்பிக் கொள்ளக் கூடாதென நினைக்கிறேன். நாடுகளுக்கு நடுவில் நடக்கும் போர் என்றால் அங்கு ‘கீதையின் விதிகள்தான்’ எங்கும் பொருந்தும் என்பதில் ஐயமில்லை. ஆனால் மனிதர்களுக்குள்ளும் அந்த விதிகள் பொருத்தமாகக் கூடாது.
இஸ்லாமியத்தில் மட்டும் கொலை செய்வதற்கு ஏன் சில விதிவிலக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஏதாவது ஒரு சரியான காரணம் கொண்டு -
கொலைக்குப் பழியாக -
குழப்பத்தைத் தடுக்க -
அல்லாஹுடனும், அவன் ரஸுலுடன் போர் செய்பவர்களை -
குழப்பத்தை உண்டாக்குபவர்களை -
இந்த சமயங்களில் கொலை செய்வது சரியா?
கொடூரக் கொலைகாரர்கள்கூட தங்கள் கொலைக்குக் காரணம் சொல்ல முடியுமே. அப்படியானால் ஒவ்வொரு கொலையும் யாரோ ஒருவரால் - நிச்சயமாக கொலை செய்தவனால் - காரண காரியங்களோடு நியாயப்படுத்த முடியுமே! அதோடு பழி வாங்குவது, அதற்காகக் கொலை செய்வது அனுமதிக்கப்படுகிறதே! இவைகள் எப்படி சரியாகும்.
புரிதலுக்காகவே இந்தக் கேள்வி.
Jan 05 2007 08:32 pm |
Uncategorized |
No Comments »
30.8.2006
நேற்று இந்துவின் கடைசிப் பக்கத்தில் வந்த ஒரு செய்தி மிகவும் பிடித்தது. ராமச்சந்திர பாபு என்ற மலையாளத் திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆரம்பித்து வைத்துள்ள ஹைக்கூ-சினிமா அல்லது சினிமா-ஹைக்கு. ஆங்கிலத்தில் இதற்கு cineku என்று பெயர் வைத்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு தங்கள் தங்கள் செல்போன் காமிராவில் திரைப்படம் எடுப்பது பற்றி ஒரு சேதி பத்திரிக்கைகளில் வந்தன. அதுபோல இங்கே ஒரு புது முயற்சி.
ராமச்சந்திர பாபு இந்த சினிகூ ஆரம்பித்தது மட்டுமல்லாமல் அதற்கு ஒரு இலக்கணம் தந்துள்ளார். 40 வினாடிகளுக்கு ஒரு ஷாட் வீதம் மொத்தம் மூன்றே ஷாட்டுகளில் ஒரு படம் எடுப்பது என்பதே அந்த இலக்கணம். 3 ஷாட்டுகள்; 120 வினாடிகள் - ஒரு படம். ஹைக்கூ கவிதை வடிவத்தையொத்து ஒரு திரைப்படம். எந்த கிராஃபிக்ஸ் சித்து விளையாட்டும் இருக்கக் கூடாது என்பதும் ஒரு விதி.
கேட்கவே நன்றாக இருக்கிறது. முயற்சி செய்ய ஆசை இருக்கு.
ராமச்சந்திர பாபு எடுத்த ஒரு சினிகூ-வின் “திரைக்கதை” கொடுக்கப்பட்டுள்ளது.
முதல் ஷாட்: குளோசப் ஷாட் - ஒரு பெண்ணின் விரலில் ஓர் ஆண் திருமண மோதிரம்
அணிவித்தல் - zoom - ஒரு ஆணும் பெண்ணும் - ஆண் பெண்ணை நெருங்க…
இரண்டாவது ஷாட்: குளோசப் ஷாட் - குழந்தை ஒன்று தாய்க்குத் தரும் முத்தம் - zoom - அப்பா,
அம்மா, குழந்தை - சந்தோஷமான குடும்பம்.
மூன்றாவது ஷாட்: குளோசப் ஷாட் - முத்தம் தரும் குழந்தை ஒன்று - zoom - இறந்த அப்பாவின்
உடல்.
இந்த சினிகூ-வின் கதை எனக்குப் பிடிக்கவில்லை. இன்னும் நல்லதாக ஆக்க முடியும்.
Jan 05 2007 08:24 pm |
Uncategorized |
No Comments »
Saturday, August 19, 2006
மீண்டும் ஓர் இடப் பெயர்ச்சி. just in a jiffy ஆரம்பிக்க முடியும்னு
பெரியவங்க சொன்னாங்க; அது மாதிரியே ப்ளாக்ஸ்பாட்டில் என் முதல் இடுகையைச் சுலபமாக ஆரம்பித்தேன். ரொம்ப
சந்தோஷமாயிருந்தது. கொஞ்ச நாள் ஆனதும் சுத்தி முத்திப்
பார்த்தப்போ, சிலரது ப்ளாக்குகள் அழகழகா இருந்ததைப் பார்த்து
ஜொள்ளு விட்டுக்கிட்டு இருந்தேன் - எதுக்கெல்லாம் ஜொள்ளுன்னு ஒரு விவஸ்தையில்லையான்னு கேக்காதீங்க, அழகா இருக்கிற எதப் பார்த்தாலும் அது தானா வருது; என்ன செய்றது? ஒரு கலா ரசனைதானே!
அது என்னமோ, வெப்லாக்ஸ் அப்டின்னாங்க; படம் எல்லாம் டிசைன் டிசைனா போட முடியும்னு சொன்னாங்களா அதனால ரொம்ப பிடிச்சிப் போச்சி. சில நல்ல மனுசங்க உதவியோடு - ஒரு மனுசிதான் - மதிக்கு நன்றி - வீடு மாத்தினேன். நல்லாதான் போச்சு. அப்பப்போ தலைப்பில படம் மாத்திக்கிட்டே இருந்தேன். ஒரு படம் நல்லா பிடிச்சதும் இத்தனை நாளா அதே படத்தலைப்போடு போய்க்கிட்டு இருந்தது. the going was good.
ஆனா இதில ஒரு முக்கிய பிரச்சனை. ஏறக்குறைய நிறைய பேர் தமிழ்மணத்தில ப்ளாக்ஸ்பாட் வச்சிருக்கிறதால ஏதாவது மாற்றம் அப்டி இப்டின்னு கொண்டுவந்தா, செய்முறை எல்லாம் ப்ளாக்ஸ்பாட்டுக்குதான் கிடைக்கும்; வெப்லாக்ஸ்காரங்க எண்ணி நாலஞ்சு பேருதான்னு நினைக்கிறேன். அதில நான் ஒருத்தன் மட்டும் தான் க.கை.நா.. அதனால திருவிழாவில தொலஞ்ச சின்ன பிள்ளை மாதிரி நிறைய நேரம் ‘பே’ன்னு (ங் இதுக்கு ரெட்டைக்கொம்பு சேர்க்கிறது எப்படின்னு தெரியலை; அதான் ‘பே’ன்னு போட்டுக்கிட்டேன்!) நிக்க வேண்டியதாகிப் போச்சு.
இப்போ இன்னொரு பிரச்சனை. புதுப் பதிவு போடும்போது தட்டச்சிவிட்டு ப்ரிவியூ பார்த்தால் கோணக்க மாணக்க இருக்கும். அது என்னமோ htmlன்னு ஒண்ணு இருக்காமே, அது கன்னாபின்னான்னு மாறியிருக்கும். அத சரி செஞ்சிட்டு மறுபடி ப்ரிவியூ பார்த்தா இப்போ இன்னொரு கோணக்க மாணக்க.. ஒரு பதிவு போடறதுக்குள்ள தாவு தீர்ந்திடும். அதோட இந்த சமயத்திலதான் நான் இடப்பங்கீடு பற்றிய நீண்ட (நீங்க யாருமே படிக்காத, நீங்க யாருமே படிக்க மாட்டீங்கன்னு தெரிஞ்சுமே நான் சீரியஸா போட்ட) பதிவுகளாகப் போடவேண்டியதாயிருந்தது. பொறுமை இழந்து, போராடி ஒவ்வொரு பதிவையும் ஏற்றும்படியாய் இருந்தது.
போதும்டா சாமின்னு ஆகிப்போச்சு. (என்னடா சாமிய எல்லாம் இவன் கூப்பிடுறானேன்னு கேக்றீங்களா? இங்க ஒரு digression -
வாத்தியார் புத்திதான்! (bye pass செய்துட்டு மருத்துவமனையில் ஒரு நாள்; படுக்கையில் படுத்திருக்கேன்; அப்ப எல்லாம் ஒரு தும்மலோ, இருமலோ வந்துட்டா…அம்மாடி…நெஞ்சாங்கூடு இருக்கே, அங்கே என்னமோ பிச்சுக்கிட்டு போறது மாதிரி ஒரு வலி வரும் பாருங்க…அப்படி ஒரு நேரம்..வலி சுரீர்னு..அது ஒண்ணும் சாதாரண மானிட சுரீர் இல்ல… இது அதையும் தாண்டி… அந்த நேரத்தில வலியில ‘ஓ, ஜீசஸ்’அப்டின்னேன். பக்கத்தில இருந்த மனைவி மக்களுக்கு ஒரே சந்தோஷம்…ஆஹா, மனுஷனுக்குப் புத்தி வந்திருச்சு அப்டின்னு. சிரிச்சிக்கிட்டே ‘அதுதான் சொல்றதுக்கு ஒரு rhyming-ஆ style-ஆ இருக்கு; அவ்வளவுதான்’ அப்டின்னேன். ‘அதான, இந்த மனுஷனுக்கு அப்படியா நல்ல புத்தி வந்திரப்போகுது’ - இது
மனைவியின் பின்னூட்டம், அதாவது comment) சரி..சரி…எங்க விட்டேன். போதும்டா சாமின்னு ஆகிப்போச்சா..நாலும் தெரிஞ்ச நாலு மக்கள்கிட்ட கேட்டேன். ஏறக்குறைய எல்லாரும் சொன்னதன் சாராம்சம்: எல்லாருக்கும் ஒரு வழின்னா இடும்பனுக்கு மட்டும் ஒரு வழியாம்னு தெக்காட்டுப் பக்கம் ஒரு சொலவடை உண்டு; அது மாதிரி நீங்க மட்டும் ஏன் அத வச்சிக்கிட்டு மாரடிக்கிறீங்க…பேசாம உலகத்தோடு ஒட்ட ஒழுகல்தான் சரி அப்படின்னுட்டாங்க. நம்ம ஒன்பது கட்டளைகளில் ஒன்றான dare to be different அப்டிங்கிற நம்ம கட்டளைய ஒதுக்கி வச்சிடறதா முடிவு செஞ்சாச்சு.
நல்ல வேளையா, ஒரு ‘கவைக்கு’ இருக்கட்டும்னு வெப்லாக்ஸில போட்ட பதிவுகளை அப்பப்போ பழைய ப்ளாக்ஸ்பாட்டில சேமிச்சி வச்சிக்கிட்டு இருந்தேன். என்ன, முதல் உள்ளதில போட்டோ அது இதுன்னு போடறது உண்டு.இங்கு அத ஏற்றலை. அதோட வந்த ஒரு நாலஞ்சி பின்னூட்டங்களை அப்படியே copy ‘n paste செஞ்சி பதிவோடு சேர்த்து போட்டு வரவேண்டியதாயிருந்தது. எப்படியோ அப்படி இப்படின்னு 146 பதிவுகள் வரை போட்டு வச்சிருந்திருக்கேன். இன்னும் ஒரு இருபது பதிவு இன்னும் ஏற்றணும். சீக்கிரம் போட்டுடணும்.(இல்லேன்னா ஒங்கள மாதிரி ஒண்ணு ரெண்டு பேரு வர்ரவங்க ரொம்ப ஏமாந்திருவாங்களே?!)
இதில இன்னும் கொஞ்சம் சிக்கல் இருக்கும்போலத் தெரியுது.
பின்னூட்டத்தில தகராறு வரும்னாங்க. சரி, அதெல்லாம் பின்னூட்டம் நிறைய வாங்குறவங்க பட வேண்டிய கவலை. நம்மள மாதிரி ஆளுகளுக்கு எதுக்கு அதெல்லாம். ஏதோ, ஒரு ஓரத்தில உக்காந்தோமா; நமக்குப் பிடிச்சதை எழுதினோமான்னு இருக்கிற ஆளு நம்ம. அப்படியே கீதையைக் கடைப்பிடிக்கிற ஆளு - பதிவுகளைப் போடு; பின்னூட்டங்களைப்பத்திக் கவலைப்படாதேன்னு அன்னைக்கே சும்மாவா சொல்லியிருக்கு.
கொஞ்சம் கவலைதான். வெப்லாக்ஸ் கெட் அப்பே தனிதான். படம் போட்ட அழகு என்ன? category வச்சிருந்த அழகு என்ன? அந்த lay out இருந்த இருப்பென்ன? இப்படி பல என்ன..என்ன..! ஆனால் என்ன, ப்ளாக்ஸ்பாட்டில கண்ணே கண்ணுன்னு ஒரே ஒரு டெம்ப்ளேட்…அதில நூத்தி எட்டு டெம்ப்ளேட். எத தூக்கி எதுல போடறதுன்னு ஒண்ணும் கடைசி வரை புரிஞ்சதில்லை. ப்ளாக் ஸ்பாட்டில கொஞ்சம் பிடிபடுது. உதவிக்கும் பார்ட்னர் செல்வன் மாதிரி ஒரு சில நல்லாத்துமாக்கள் (வாழ்க அவர்கள் உயருள்ளம்! மக்களே, ஐஸ் வச்சாச்சு; அடுத்த தடவை வரும்போது மறந்திராதீங்க!)
சரி…எப்படியோ மறுபடி ப்ளாக்ஸ்பாட்டுக்கு வந்தாச்சு. பழைய வீட்டை - வெப்லாக்ஸை - இனிமே ஸ்டோர்ஹவுஸா வச்சுக்க வேண்டியதுதான். நீங்க எல்லோரும் . நீங்க எல்லோரும் எப்போதும் மாதிரி கண்டுக்காதீங்க; வர்ட்டா…!
posted by Dharumi @ 8/19/2006 11:01:00 AM
>
——————————————————————————–
< 27 Comments:
முத்து(தமிழினி) said...
இத்தெல்லாம் சரிதான்.ஆனா இந்த டெம்பிளேட் நல்லா இல்லையே..நிறைய திருத்தணும் அய்யா...
வெப்பிளாக்கில் இருந்து ஓடியதில் என் பங்கும் கொஞ்சம் இருக்காமே?:))
8/19/2006 12:56:30 PM
செல்வன் said...
வீடு மாறியபின் முதல் பின்னூட்டம் எனது தான்.நம்ம ராசி வர்க் அவுட் ஆச்சுன்னா பின்னூட்டமா பொழியும்.சுத்தமா வரலை என்றாலும் நீங்க தான் அதில் நம்பிக்கை இல்லாதவராச்சேன்னு சொல்லி சமாளிச்சுடலாம்:)))
ப்ளாக்கரிலேயே வகைப்படுத்தும் முறை இருக்கு தெரியுமா? www.beta.blogger.com போயி ஒரு பதிவை துவக்குங்க.வெப்லாக்சில் இருக்கும் அத்தனை வசதியும் அதிலே இருக்கு
8/20/2006 08:20:13 AM
சதயம் said...
ஹி..ஹி..குருப்பெயர்ச்சி...குருபெயர்ச்சின்னு சொல்லுவாங்களே அது இதுதானா...
இனி ப்ளாக்ஸ்பாட்ல கலக்குங்க...
வாழ்த்துக்கள்
8/20/2006 02:00:02 PM
பொன்ஸ் said...
Mouse problem.. -> No tamil.
Not to worry, We will make this Blogspot look like Wordpress.. You will again dare to be different
)))
8/20/2006 09:22:38 PM
sam said…
This post has been removed by the author.
8/24/2006 12:40:04 AM
DHARUMI said…
test III
8/24/2006 12:41:50 AM
குறும்பன் said…
நிறைய வூடு கட்டுவிங்களாட்ட தெரியுது. இது தான் கடைசி வூடா இல்ல இன்னும் புதுசா வூடு கட்டுவிங்களா?
8/24/2006 12:55:24 AM
Thekkikattan said…
இப்படி ஒத்த ஆளா உங்கள புலம்ப விட்டுடங்களே, தருமி ஐயா மண்டபத்திலே தனியாவ இருக்கீக… பாத்து காத்து கருப்பு வந்து அடிச்சுடப் போகுது
)
8/24/2006 01:08:43 AM
dharumi said…
This post has been removed by a blog administrator.
8/24/2006 11:02:40 PM
dharumi said…
This post has been removed by a blog administrator.
8/24/2006 11:04:16 PM
sam said…
now i am not getting even my own comments in my posts
8/24/2006 11:06:12 PM
lakshmi said…
Hi Sam,
‘Everything is for good’ . Looking forward to your next post.
8/25/2006 01:10:59 PM
dharumi said…
This post has been removed by a blog administrator.
8/26/2006 04:53:53 PM
dharumi said…
This post has been removed by a blog administrator.
8/26/2006 05:01:02 PM
sam said…
testII
8/26/2006 05:12:17 PM
dharumi said…
testIII
8/26/2006 05:12:48 PM
Dharumi said…
This post has been removed by the author.
8/26/2006 05:20:50 PM
Dharumi said…
test
நமக்கு நாமே திட்டத்தின் படி…!!
8/26/2006 05:28:44 PM
Anonymous said…
test4 - as anonymous
8/26/2006 11:50:03 PM
Anonymous said…
This post has been removed by a blog administrator.
8/26/2006 11:50:17 PM
Anonymous said…
ஒரே டெஸ்ட் மயம்தான்…எல்லாம் நேரம்தான்…!! டெஸ்ட் 4
8/27/2006 12:02:19 AM
ralsam said…
test - sam
8/27/2006 10:17:09 AM
இராமநாதன் said…
பெரீய்யப்பா,
திரும்ப பூர்வீக வீட்டுக்கே வந்துட்டீங்க.
வருக வருக.
8/27/2006 11:03:07 AM
Dharumi said…
நமக்கு நாமே திட்டத்தின் படி…!!
test II
8/29/2006 10:03:57 AM
பொன்ஸ் said…
தருமி,
வருக வருக.. மீண்டும் ப்ளாக்ஸ்பாட்
எப்படி படம் போடுறதுன்னு சீக்கிரமே சொல்றேன்.. வெப் லாக்ஸ் மாதிரியே இதையும் கலக்கிடுவோம்..
8/29/2006 03:38:24 PM
மணியன் said…
Return of the prodigal son ! Let him be resurrected !!
9/04/2006 12:21:47 PM
Narayanaswamy.G. said…
Sir
Stylesheetsla mouse hover link colour appadinu oru samasaram irukkum. Adhu whitenu irukku. adhai vera dark colourukku mathunga. illaina endha link mela mouse kondu ponalum link kaanapoodum!
9/05/2006 08:49:17 PM
Post a Comment
Sep 14 2006 07:36 pm |
Uncategorized |
No Comments »
174. IF I WERE THE …. …. ?
நம் மாநில முதலமைச்சர் கீரிப்பட்டி,பாப்பாப்பட்டி, நாட்டார் மங்கலம், கொட்டக்கச்சியேந்தல் என்ற கிராமப் பஞ்சாயத்துகளில் நடந்தேறிக்கொண்டிருக்கும் தேர்தல் என்னும் கேலிக்கூத்துக்களை மனதில் கொண்டு, அந்த கிராமங்களில் ஒழுங்கான தேர்தல்களும், தலித்துகளின் முழுமையான அரசியல் பங்கேற்பும் நடை பெறும்வரை அவைகளின் ‘ரிசர்வ்டு’ நிலை நீட்டிக்கப்படும் என்று கூறியுள்ளது வரவேற்கத்தக்கதே. ஆயினும் இதனால் எல்லாம் அங்குள்ள பெருவாரியான தேவர்(கள்ளர்?)சாதி மக்கள் மனம் தளர்ந்து விடப் போகிறார்களா என்ன? அவர்கள்தான் ஆளமட்டுமே பிறந்தவர்களாச்சே! அவர்கள் விட்டுக் கொடுத்தோ, அவர்களை விட்டுக் கொடுக்க வைத்தோ தலித்துகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு ஜனநாயகம் மலர்ந்து விடும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. அந்த சாதியைச் சேர்ந்த சிலரோடு பேசிப் பார்த்ததிலேயே இந்த உண்மை புரிகின்றது. விடாக் கொண்டான், கொடாக் கொண்டான் கதைதான். அந்த பெருவாரியான சாதியினர் கொடாக் கொண்டான் என்றால் அரசாங்கமும், அரசாங்கத்தின் அங்கங்களும் விடாக் கொண்டான் போல் வேஷம் போட்டுக் கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. அரசாங்கம் தன் முழு பலத்தோடு இறங்கினால்தான் இந்தப் பிரச்சனை முடிவுக்கு வரும். ஓட்டுக்களில் கண்ணை எப்போதும் வைத்திருக்கும் எந்த சனநாயக அரசும் அந்த முடிவுக்கு வராது. எப்போதும் போல ‘தேர்தல் நாடகங்கள்’தான் நடந்தேறும்.
தலித் தலைவர்களும், தலித் கட்சிகளுமாவது இதில் முழு முனைப்போடு இருக்கிறதா, இருக்குமாவெனில், அதுவும் இல்லை. இந்த நிலையில் தலித் மக்கள் முழு வீச்சில் புரட்சியில் எழ முடியுமாவென்றால் அது இப்போதைக்கு நடக்கக் கூடிய காரியமல்ல; அவர்களின் வாழ்வும், வாழ்வாதாரமும் பெருவாரிச்சாதியினரை அண்டிப் பிழைக்கக் கூடிய நிலையில்தான் இருக்கிறது. தட்டில் விழும் பருக்கைகளைப் புறந்தள்ளி, அடிப்படை வாழ்க்கையின் தேவைகளை உதறிவிட்டு புரட்சிக்குப் புறப்படுங்கள் என்றால் எப்படி நடக்கும்.
இந்த நிலையில் என்னதான் நடக்கும்; நடக்க முடியும்?
கனவுகள்..கனவுகள்… IF I WERE THE ——-
IF I WERE THE C. M. OF TN….
எளியோருக்கு இரண்டு ஏக்கர் நிலம் கொடுக்கும் திட்டம் இந்த நான்கு கிராமங்களில் முதலில் நடக்கும். ஆளுக்கு இரண்டு ஏக்கர் என்பதைவிடவும் அந்த ஒவ்வொரு கிராமத்துத் தலித்துகளுக்கும் மொத்தமாக ஒரு பொது நிலம், அனைவரும் சேர்ந்து உழைக்க ஒரு கூட்டமைப்பு, அவர்கள் விவசாயம் செய்ய எல்லா வகை உதவிகள், கட்டமைப்புக்கு வேண்டிய தேவையான எல்லா உதவிகள், அரசாங்க விவசாயத்துறையின் நேரடி மேற்பார்வையும், உதவியும், முக்கியமாக எல்லாவகை பாதுகாப்பு, - இவைகள் அனைத்தும் அவசரகால அடிப்படையில் செய்து தந்து இந்த மக்கள் தலை நிமிர, வயிற்றுப்பாடு முற்றிலும் தீர, மக்கள் பொருளாதார அடிப்படையில் தன்னிறைவடைய எல்லாமும் செய்யப்படும்.
IF I WERE THE COLLECTOR OF THAT DISTRICT …..
இந்த நான்கு கிராமங்களில் நிச்சயமாக தலித்துகள் தனியாக ஒதுங்கி, ஒதுக்கப்பட்டு தனிச் சேரிகளில்தான் வாழ்வார்கள். அந்தப் பகுதி மட்டும் மாவட்ட அதிகாரிகளின் தனிக்கவனம் பெறும். அவர்களுக்கு வேண்டிய தண்ணீர், சாலை, பள்ளிக்கூடங்கள், காவல் நிலையங்களும், அங்கு இந்த சாதிவெறி இல்லாத காவல் துறையினரும், மாவட்ட அதிகாரியினால் முழுமூச்சில் செய்யக்கூடிய அனைத்து உதவிகளும் விரைந்து அளிக்கப்படும். முக்கியமாக இடுகாடுகளும் அதற்குச் செல்ல தனிச் சாலைகளும் (!) அமைத்துத் தரப்படும். wantonly all the basic amenities will be DENIED to the other “high” caste. they have to wait for those things till the next elected panachyat is formed. obstinance has to be paid back by utter obstinance.
IF I WERE ONE AMONG THE MAJORITY CASTE …
(நான் மட்டும் விதி விலக்காகவா இருந்திருக்கப் போகிறேன்?)
காலங்காலமாய் எங்க காலடியில் கிடந்ததுகள், நாங்க சொன்னதக் கேட்டுக்கிட்டு இருந்ததுகள், ஒரு வாய் சோத்துக்கு எங்கள விட்டா நாதியில்லாததுகள் … இதுக பிரசிடெண்டா இருந்து எங்கள ஆளன்னும்னு நினச்சா அது முடியுமா? அவங்க சாதி என்ன? எங்க சாதி என்ன? எங்கள ஆளணும்னு நினச்சாலே அவங்கள உண்டு இல்லன்னு பாத்துற மாட்டோமா..? சும்மா உட்ருவமா, என்ன? “நாங்க” யாருன்னு உலகத்துக்குக் காமிக்க வேண்டாமா? எவன் என்ன பண்ண முடியும்னு பாத்துருவோம்….
IF I WERE ONE AMONG THOSE DALITS ….
ஊர்ல உலகத்துல எல்லோரும் என்னமாவது சொல்லிட்டுப் போயுறுவீக..இங்கன நாங்க எங்க தினசரி பொழப்ப பார்க்கணுமே. வீம்புக்கு தேர்தல்ல நின்னு அவங்கள எதுத்துக்கிட்டு நிக்கணும்னா எங்களுக்கு என்ன பலம் இருக்கு? யாரு சப்போர்ட்டுக்கு இருக்கா? ஒரு நாலு நாளு நாலு போலீசும் ரெண்டு தலைவரும் நின்னுட்டா எல்லாம் ஆயிப் போச்சா? உடுங்க’ய்யா…என்ன தேர்தல் ..என்ன தலைவர் பதவி … மொதல்ல உசுரோட இருக்கணுமே!
… மனுசனுக்கு உசிரு மேல ஆச இருந்து தொலையுதே, இந்த கேடு கெட்ட சாதியில பொறந்த பிறவும்… என்ன பண்ணச் சொல்றீக.. சொல்லுங்க … எங்கள விடுங்க .. வெந்தத தின்னுட்டு விதி வந்தா போய்ச் சேரணும்ங்கிறது எங்க தலையெழுத்தாகிப் போச்சு..
====================
ஒரு நடந்த கதை:
கல்லூரியில் முதல் தலைமுறையினருக்காக நடத்தப்பட்ட ஒரு சிறப்பு பயிற்சி வகுப்பில் ஒரு தலித் மாணவன் சொன்னது:
இன்றைக்கும் அவர் பஸ் விட்டு இறங்கி தன் சேரிக்குச் செல்லும்போது அந்தப் “பெரிய”சாதிக்காரர்களின் பகுதியைத் தாண்டித்தான் போகவேண்டும். அப்படிப் போகும்போது தங்கள் காலணிகளைக் கையில் எடுத்துத்தான் செல்ல வேண்டுமாம். நல்ல வேளை சட்டையைக் கழட்டச் சொல்வதில்லை அந்தக் கிராமத்தில்!
மாணவனிடம், சரி, உங்களைப் பார்க்க நானே வருகிறேன் என்று வைத்துக் கொள்வோம். அப்போது என்னையும் அப்படி எதிர்பார்ப்பார்களா என்று ஆசிரியர் கேட்ட போது நிச்சயமாக என்றார் மாணவர். அப்படியே அந்த வரைமுறை தெரியாமல் நீங்கள் என்னை வந்து பார்த்துவிட்டுப் போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்; நீங்கள் போனபிறகு என்னைக் கூப்பிட்டு ‘ஊர் கட்டுமானத்தைச் சொல்லிப்பிடு; அடுத்த தடவை இப்படியெல்லாம் நடக்கக் கூடாது’ என்று சொல்வார்கள் என்றார்.
நமக்கு சுதந்திரம் வந்து 60 ஆண்டுகள் முடிந்து விட்டதாமே!
ஜெய்ஹிந்த்.
another naked truth of casteism has been shown here in this post in all its rawness.
>
<
> <
Sep 14 2006 04:48 pm |
Uncategorized |
No Comments »
இஸ்லாம் மதத்தைப் பற்றிய என் ஐயங்களை என் மதங்களைப்பற்றிய 7-ம் பதிவில் எழுப்பியிருந்தேன். பொதுவான சிலவற்றைப் பற்றிப் பேசிவிட்டு ‘இனி என் ஐயங்கள்’ என்று தலைப்பிட்டு 20 ஐயங்களைப் பட்டியலிட்டிருந்தேன். இதற்கு விளக்கமளிக்க வந்த பதிவுகளில் என் முதல் கேள்விக்குப் பதிலளிக்கப்பட்டுவிட்டது. நன்றி.
1.)பழைய ஏற்பாடு இரு (கிறித்துவம், இஸ்லாம்)மதத்தினருக்கும் பொது எனப்படுகின்றது. கிறித்துவர்களின் பைபிளில் ஆதாம் - ஏவாள் படைப்பைப் பற்றி சொல்லும்போது ஆணின் விலா எலும்பிலிருந்து பெண் படைக்கப்பட்டாள் என்பதை, இது ஓர் ஆணாதிக்க விளக்கம் என்று கூறியிருந்தேன். ஆனால், முஸ்லீம் எழுத்துக்களில் அந்த முதல் பெண்ணுக்குப் பெயரே இல்லை. பெயர் தரும் அளவிற்குக்கூட பெண்ணுக்கு முக்கியம் இல்லையோ? - இது என் கேள்வி.
(கேட்டிருக்கும் கேள்விகளில் இந்த முதல் கேள்வியை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். ஏனெனில் அக்கேள்விக்கு நண்பர்கள் பதில் கொடுத்துவிட்டார்கள். அந்த முதல் பெண்ணுக்கு ‘அவ்வா’ (AWWA) என்று பெயர் குரானில் சொல்லியுள்ளதாக விளக்கியுள்ளார்கள். விளக்கத்திற்கு நன்றி. )
இதன் பிறகு சில பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவைகளை நான் கேள்விகளாகவே பொதுவில் வைக்கவில்லை. நான் அறிந்தவரையில் சொன்ன சில காரியங்களுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளன. அவைகளில் சிலவற்றை ஏற்றுக்கொள்கிறேன். ஏனெனில் அவற்றைப் பொறுத்தவரை எனக்கு அவைகள் அவ்வளவு முக்கியமானவைகளாகத் தெரியவில்லை. .
1) குர்ஆன் குகையில் கொடுக்கப்பட்டதா? - குரான் எப்படி எங்கே கொடுக்கப்பட்டது என்பது எனக்கு முக்கியமாகப் படவில்லை. கொடுத்தவைகளாகக் கருதப்படுபவைகளில் எனக்கு வந்த ஐயங்களைத்தான் நான் தொகுத்திருக்கிறேன்.
2) முஹம்மது நபி எழுதப்படிக்கத் தெரிந்த வர்த்தகரா ? - சில கருத்து வேறுபாடுகள் உண்டென்று படித்ததைக் கூறியுள்ளேன். அவர் கற்றவரா கல்லாதவரா என்ற விவாதத்தை நான் வைக்கவில்லை. எப்படியிருந்திருந்தாலும் அது எனக்கு உடன்பாடே.
3) சில போர்களில் தோற்றது ஏன்? god is always on the side of bigger battalion என்று சொல்லப்படுவது நினைவுக்கு வந்தது!
4) இஸ்லாத்தில் பெண்களின் நிலை:
Zaynab bint Jahsh- ஜேனாப் என்ற இந்தப் பெண்மணி முகமதின் வளர்ப்பு மகனின் மனைவி; வளர்ப்பு மகன் விவாகரத்து செய்த பின் இப்பெண்ணை முகமது மணம் முடிக்கிறார் . - தருமி
இதுவும் நான் கேள்வியாக வைக்காத ஒன்று. ஆயினும், நான் சொன்னதையும், அதற்கு அளிக்கப்பட்டுள்ள பதிலையும் (கீழே கொடுக்கப்படுள்ளது) படித்துவிட்டு, படித்தவர்கள் அவர்களே ஒரு தீர்மானத்திற்கு வந்து கொள்ளட்டும். அதில் எனக்கு விவாதத்திற்கு இடமோ தேவையோ இல்லை. நிச்சயமாக எனக்கு இந்த விளக்கம் சரியானதாக இல்லை. வளர்ப்பு மகனின் விவாகரத்திற்குப் பின் அந்தப் பெண்ணையே வளர்ப்புத் தந்தை மணம் புரிவது தவறல்ல என்ற இந்த கூற்று எனக்கு வியப்பையே அளிக்கிறது.
“இதில் என்ன குற்றம் கண்டீர்? ஒரு பெண்ணை கணவன் விவாக ரத்து செய்தபின் இன்னொருவர் மறுமணம் செய்யக் கூடாது என்கிறீர்களா? அல்லது வளர்ப்பு மகன் உண்மையான மகனாவான் என்கிறீர்களா ?”
5) படைப்புக்கொள்கை - “இஸ்லாம் சொல்லும் படைப்புக் கொள்கை தவறு என்பது உங்கள் வாதமானால் , நீங்களே சொல்லுங்கள் மனிதன் எதிலிருந்து தோன்றினான் ? பகுத்தறிவு பெற்ற குரங்குகள்தான் தற்கால மனிதனின் மூதாதையர் என்றால், இன்னும் சில குரங்குகள் ஏன் பகுத்தறிவடைந்து மனிதனாகவில்லை?”
- இதற்கும் நான் பதில் சொல்லத் தயாரில்லை. முற்றிலும் குரானுக்கு எதிர்மறையான விவாதம் அது; முடிவிருக்காது; விவாதிப்பதில் எந்த பயனும் இருக்காது.ஆயினும் என் இரண்டாவது கேள்விக்குரிய பதிலாக இதை எடுத்துக் கொள்கிறேன்.
-. 3-வது கேள்விக்கு அது கிறித்துவ மத நூல்களில் நடுவில் ஏற்பட்ட மாற்றங்களையும், திரிபுகளையும் பொருத்தது என்று கூறப்படலாம். அதனையும் ஒதுக்கி விடுவோம்.
- 6-வது கேள்வி சுவனம் பற்றியது. நேரடி பதில் இதற்குக் கொடுக்கப்பட்டு விட்டதா என்பதை நடுநிலை நோக்கர்கள்தான் கூற வேண்டும்.
“56:22 (அங்கு இவர்களுக்கு) ஹூருல் ஈன் (என்னும் நெடிய கண்களுடைய) கன்னியர் இருப்பர்” அவர்கள் பெண்கள் என்பதானாலும், சுவனம் செல்லும் ஆண்களுக்கு “44:54 இவ்வாறே (அங்கு நடைபெறும்). மேலும் அவர்களுக்கு ஹூருல் ஈன்களை நாம் மண முடித்து வைப்போம்.” என்பதனாலும் - ஆண்களுக்கு இத்தகைய சுவனம் காத்திருக்கிறதென்றால் பெண்களுக்கு எப்படிப்பட்ட சுவனம் என்று கேட்டிருந்தேன். குதர்க்க விவாதம் என்று இதற்குப் பெயர் சூட்டப்பட்டு விட்டது !
ஆக, என் 20 கேள்விகளில், முதல் கேள்வி, கேள்வியே தவறானது என்று ஒப்புக்கொள்கிறேன். இரண்டாவது, மூன்றாவது, ஆறாவது கேள்விகளுக்குப் பதில் தரப்பட்டுள்ளன. அந்தப் பதில்களை நான் ஏற்றுக் கொண்டுவிட்டேனா என்பது வேறு விஷயம். அதன்பின் முக்கியமாக 4-வது கேள்வி - அது எனக்கு மிக முக்கியமாகப்படுகிறது. (இந்த வன்முறை கடவுளுக்கும்-மனிதனுக்கும் நடுவே வருவது ஆச்சரியம் மட்டுமல்ல; அதி பயங்கரமும் கூட.)மீதிக் கேள்விகளும் இருக்கின்றன.
இந்த நிலையில் புதிதாக ஒரு கேள்வியும் சேர்ந்து விட்டது. அதை பட்டியலில் சேர்த்து விடுகிறேன். திருப்திகரமான பதில் கிடைத்த முதல் கேள்வியை விட்டுவிட்டு இந்தக் கேள்வியை என் அந்தப் பழைய பதிவில் சேர்த்துள்ளேன். just an updating.
அந்தக் கேள்வியை இப்போது 5-வது கேள்வியாக:
குர்ஆன் 25 : 68: ‘அவர்கள் எந்த உயிரையும் தக்க காரணமின்றி கொல்ல மாட்டார்கள்.(காரணத்தோடு கொல்லலாம் என்று பொருள் படுகிறதே?’ - கொலை செய்பவனுக்கு ஒரு காரணம் கண்டுபிடிப்பதா பெரிது?)
5:32: “நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” என்று இஸ்ராயீலுடைய மக்களின் மீது நாம் விதியாக்கினோம்.
5:33 அல்லாஹ்வுடனும், அவன் ரஸூலுடனும் போர் செய்து கொண்டு, பூமியில் குழப்பத்தை உண்டாக்கித் திரிபவர்களுக்குரிய தண்டனையானது அவர்கள் கொல்லப்படுதல், அல்லது அவர்கள் தூக்கிலிடப்படுதல்; அல்லது அவர்கள் மாறுகால் மாறுகை வாங்கப்படுதல் அல்லது அவர்கள் நாடு கடத்தப்படுதல்…
கிறித்துவத்தில் ‘கொலை செய்யாதே’ என்பது ஒரு கட்டளையாகக் கொடுக்கப்பட்டுள்ளது; சமணத்தில் நுண்ணுயிர்களைக் கூட கொல்லக் கூடாதென்ற தத்துவம்; பிறப்பொக்கும் எல்லா உயிரும் என்கிறது தமிழ்மறை; எல்லா உயிரும் ஒன்றே, உயிர்க்கொலை தவறு என்கிறது இந்து மதம். இந்த கோட்பாடுகளில் எந்த clasue, sub-clause-ம் கிடையாது, அதாவது இந்தந்த மாதிரி நேரங்களில் மட்டும் கொலை செய்யலாம் என்ற விலக்குகள் தரப்படவில்லை. கொலை என்பது ஒட்டுமொத்தமாக தவறு; பாவம் என்றுதான எல்லா மதங்களும் போதிக்கின்றன.
இஸ்லாமியத்தில் மட்டும் கொலை செய்வதற்கு ஏன் சில விதிவிலக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஏதாவது ஒரு சரியான காரணம் கொண்டு -
கொலைக்குப் பழியாக -
குழப்பத்தைத் தடுக்க -
அல்லாஹுடனும், அவன் ரஸுலுடன் போர் செய்பவர்களை -
குழப்பத்தை உண்டாக்குபவர்களை -
இந்த சமயங்களில் கொலை செய்வது சரியா?
கொடூரக் கொலைகாரர்கள்கூட தங்கள் கொலைக்குக் காரணம் சொல்ல முடியுமே. அப்படியானால் ஒவ்வொரு கொலையும் யாரோ ஒருவரால் - நிச்சயமாக கொலை செய்தவனால் - காரண காரியங்களோடு நியாயப்படுத்த முடியுமே! அதோடு பழி வாங்குவது, அதற்காகக் கொலை செய்வது அனுமதிக்கப்படுகிறதே! இவைகள் எப்படி சரியாகும்.
புரிதலுக்காகவே இந்தக் கேள்வி.
Aug 16 2006 12:12 pm |
மதங்கள் |
3 Comments »
இடப் பங்கீடு பற்றி விரிவாக எழுத வேண்டிய ஒரு நிலை திசைகளில் எழுத அழைக்கப்பட்டதால் ஏற்பட்ட பிறகே அதனைப் பற்றிய ஒரு முழுக் கண்ணோட்டம் எனக்குக் கிடைத்தது. கிடைத்த சேதிகளும் நடந்து வந்த, வருகின்ற விஷயங்களைப் பார்க்கும் போதுதான் ஒரு மிரட்சியே ஏற்பட்டது,
இடப்பங்கீட்டின் தேவை,
இதுவரை நடந்தேறிய நல்லதும் அல்லதும்,
இனி நடக்கவேண்டியவைகள்,
அதற்குள்ள முட்டுக்கட்டைகள்,
முட்டுக்கட்டை போடுபவர்களின் திறமை,
அவர்களின் மனப்பாங்கு,
எல்லாவற்றையும் விடவும்
UPSC தேர்வுகளில் நடக்கும் பித்தலாட்டங்கள்
இவைகள் எல்லாம என்னை உண்மையிலேயே மிகவும் பாதித்தன. அந்தப் பாதிப்பை நம் பதிவர்களோடவாவது பகிர்ந்து கொள்ள நினைத்து அக் கட்டுரையை என் பதிவுகளில் தொடர்ந்து இட்டேன். பலரின் கவனம் கவர வேண்டுவதற்காகவே அக்கட்டுரையைப் பகுதிகளாகப் பிரித்தும் இட்டேன்.
ஆயினும் நான் எதிர்பார்த்தது போல் இந்த விஷயம் அதிகம் பேரைப் போய்ச்சேர்ந்ததாகவோ, படித்தவர்களைப் பாதித்ததாகவோ தெரியவில்லை.அதற்குக் காரணமும் தெரியவில்லை. வழக்கமாக என் பதிவுகள் பக்கம் கொஞ்சமாவது எட்டிப் பார்த்துவிட்டுப் பின்னூட்டம் வெகு சிலராவது போடுவதுண்டு. I would not touch it even with a ten foot pole என்பது மாதிரி யாரும் எட்டிகூடப் பார்க்கவில்லை.
ஒவ்வொரு semester இறுதியிலும் மாணவர்களிடமிருந்து ஒரு feedback வாங்குவதுண்டு - நான் வகுப்பு எடுத்த ‘அழகை’ப்பற்றி தெரிந்து கொள்வதற்காக. அந்த feedback எழுதும் போது மாணவர்கள் தங்கள் பெயரை எழுதக்கூடாது என்பது ஒரு விதி. அதைப் போலவே இப்போது ஒரு feedback எனக்கு வேண்டும். ஆகவே வழக்கமான என் விதியைத் தளர்த்தி உங்களிடமிருந்து முறையான, என் மாணவர்கள் இதுவரை தந்தது போன்ற முதிர்வான, பாரபட்சமற்ற, forthright கருத்துக்களை அனானியாக வந்தே தெரிவிக்க அழைக்கிறேன்.
எனக்குள் உள்ள கேள்விகள்:
1. ஏன் இந்தப் பதிவுகள் மற்ற என் பதிவுகளுக்குப் பெறும் கவனிப்பைக் கூட பெறவில்லை?
2. கட்டுரை உங்களிடம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லையா?
3. ‘நடப்பது நடந்தே தீரும்’, தலையெழுத்துப்படிதான் எல்லாம் நடக்கும்’, - என்பது போன்ற fatalist idea-வின் படி செல்லும் மனப்பாங்கு காரணமாக இருக்குமோ?
4. ‘இதெல்லாம் எனக்கு முன்னமேயே தெரியுமே’ என்பதா?
5. இதில் ஆச்சரியப்படவோ, வருத்தப்படவோ ஏதுமில்லையே என்பதா?
அனானிகளாக வந்து பதிலளிக்க அழைக்கிறேன்.
Aug 14 2006 02:33 pm |
Uncategorized |
6 Comments »
தி.மு.க., அ.தி.மு.க. இரண்டிலேயும் இரண்டாவது ஆளாக எப்போதும் இருந்த - numero uno என்பதற்குப் பதில் numero doux ! ஆக இருந்த நெடுஞ்செழியன் மீதும் மற்ற அவரது தலைவி மேலும் சொத்துக் குவிப்பு வழக்கு போட்ட போது சொன்னார்: ‘இந்தக் கேசு எல்லாம் ஜுஜுபி; இதில தோற்றாலும் அடுத்து அப்பீல் போட மாட்டோமா? அப்படி இப்படி பல வருஷம் வழக்கு இழுத்துக்கிட்டே போகும். அதற்குள் எத்தனை பேர் இருப்போமோ, போவோமோ’. சும்மா சொல்லக்கூடாது; மனுஷன் தீர்க்கதரிசிதான். கேஸ் முடியறதுக்குள்ளேயே அவர் போய்ச்சேர்ந்துட்டார்.
பல குற்றவாளிங்க தப்பிச்சாலும் ஒரு நிரபராதிகூட தண்டிக்கப்பட்டு விடக்கூடாதுன்னு எந்த பெரிய மனுஷன் சொன்னாரோ தெரியலை; நம்ம ஊரு நீதிமன்றங்கள் முதல் பாதியை முழுசா - குற்றவாளிங்களை விட்டுடறதப் பத்தி சொல்றேன் - காப்பாத்திடுறாங்க. டான்ஸி கேஸ்ல கூட பாருங்க..நீதிபதி, ‘ ஏதோ நீங்களா பாத்து பெரிய மனசு பண்ணி அந்த நிலத்தைத் திருப்பி கொடுத்துட்டு, அதுக்குப் பொறவாட்டி வீட்ல தனியா உக்காந்து மோட்ட பாத்துக்கிட்டு நம்ம பண்ணினது சரிதானான்னு உங்களயே நீங்களே கேட்டுப் பாத்துக்குங்க ‘ அப்டின்னு ஒரு பிரமாதமான தீர்ப்பைக் கொடுத்தார்.
இதுக்கு ஏத்தது மாதிரியே நம்ம C.B.I. எடுத்து நடத்துற கேஸ்கள்ல முக்காலே முண்டாணி சரியாக வழக்கு பதிவு செய்யப்படவில்லை; தகுந்த ஆதாரங்கள் தரப்படவில்லை; குற்றப் பத்திரிக்கையை ஒழுங்கா பைண்டு பண்ணிக் கொடுக்கவில்லை - இப்படி ஏதோ ஒரு காரணம் காட்டி வழக்குக்களை டிஸ்போஸ் செய்துவிடுகின்றன நமது நீதிமன்றங்கள்.அது பத்தாதுன்னு நம்ம I.P.C. எப்படி எழுதுனாங்களோ, யார் எழுதுனாங்களோ, எதுக்கு எழுதுனாங்களோ யாருக்குத் தெரியும். ஓட்டைகளே அதிகம் போலும். ஒரு பானைன்னா அதில ஊத்துறதுக்கு வாய் வேணும், அதவிட்டுட்டு பானை பூரா ஓட்டை போட்டு வச்சா தண்ணி எங்க நிக்கும்.
இப்போ கூட பாருங்க..மும்பை தொடர் குண்டு வெடிப்பு கேஸ் - நடந்தது 1993; விசாரணை 1995-லிருந்து. விசாரணை முடிஞ்சது ஜூன் 30, 2003; கேசு நடந்த இந்த கால கட்டத்துக்குள்ள 11 பேரு மர்கயா; பத்தாம் தேதி தீர்ப்பு வரும் என்று தினசரிகளில் செய்தி வந்ததும் பரவாயில்லையே இவ்வளவு சீக்கிரம் தீர்ப்பு சொல்லப் போறாங்களே, இன்னைக்கு அது என்னன்னு பார்த்து விடுவோம்னு நினச்சுக்கிட்டு இருந்தேன். என்ன சொல்லுவாங்கன்னு ஓரளவு நினச்சு வச்சுருந்தேன். என்ன சொல்லுவாங்க…சாட்சிகள் எல்லோரும் முதலில் சொன்னதை பிறகு இல்லன்னு சொல்லியிருப்பாங்க..அல்லது C.B.I. கொடுத்த சான்றுகள் சரியாக நிரூபிக்கப் படவில்லை…அல்லது மனிதாபிமான அடிப்படையிலும், சஞ்சய் தத் ரசிகர்கள் ஏமாந்து வருத்தப்பட வாய்ப்பு இருப்பதாலும் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்றோம் அப்டின்னு எதிர்பார்த்தேன்.
ஆனா பாருங்க…நான் நினச்சுப் பார்க்காத ஒரு லா பாயிண்டு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குக் கிடைச்சிருச்சி. அபு சாலிம் எவ்வளவு நல்லவர்; வல்லவர். அவர் தொடர்பான ஒரு கேஸ் இன்னும் பெண்டிங். அதனால் இந்த கேசின் தீர்ப்பு ஒத்திவைக்கப் படுகிறது. இதில் இன்னொரு விஷயம்: ” commencing delivery of judgment ” என்பதற்கும் ” commencement of judgment ” என்பதற்கும் உள்ள வித்தியாசம் பற்றி நீதிபதி ஒரு ‘ ஆங்கில வகுப்பு ‘ எடுத்திருக்கார். இப்படி ஒரு hair-splitting argument (தவறிப்போய் இதைத் தமிழில் சொன்னால், யாராவது contmept of court அப்டின்னு சொல்லி ஏதாவது பயமுறுத்துவாங்க…) எவ்வளவு தேவை பாருங்க.
நம்ம நீதி மன்றங்களில் என்னதான் நடக்கிறது? எந்த பெரிய ‘முதலை’யும் தண்டிக்கப்பட்டதாக வரலாறே கிடையாதா? கீழ் கோர்ட்டில் ‘பூட்ட” கேசு அடுத்த கோர்ட்டில் ‘மறு உயிர்பெற்று’ துள்ளியெழுகின்றது. கீழே தூக்குத்தண்டனை என்றால் மேல் கோர்ட்டில் நிச்சயம் ஆயுள் தண்டனை; இப்படியே போகும் நமது நீதி பரிபாலனம்.
என்னமோ போங்க…ஒண்ணுமே புரியலை.
Aug 12 2006 12:23 am |
Uncategorized |
19 Comments »
நெஜமாத் தான் கேட்குறேன்.. அந்த போட்டோ எடுத்தவர் யாரு? - நானும் என்னை நல்லா தெரியற மாதிரி நாலு போட்டோ எடுத்துக்கிடத் தான்..
சொன்னவர்: பொன்ஸ் | 9/25/2006 08:01:16 PM
இந்த சனிக்கிழமை மதுரை வரேன். வந்து உங்களை பார்க்கிறேன், அடுத்ததா என்னையும் உங்க லிஸ்ட்’ல சேர்த்துக்கங்க……..
))))
சொன்னவர்: ராம் | 9/25/2006 08:13:40 PM
நீங்க பாட்டுக்கு சட்டைப் போடாத ஒரு காட்டான், மாட்டு வண்டியில வந்து தார் குச்சியோட பார்க்கவராத சொல்லியிருக்கிறான்னு நினைச்சுக்கிட்டு காத்திட்டு இருப்பீங்க.
ஆனால் இங்க ஒரு 36 வயது இளைஞன்
ஜீன்ஸ் பேன்ட்டும், ட்டி சர்ட்டுமா வந்து நிக்கிறான்னு எழுதி வைக்கப் போறீங்க.
நல்ல அனுபவம் போங்க.
சொன்னவர்: Thekkikattan | 9/25/2006 08:28:59 PM
சொன்னவர்: இராமநாதன் | 9/25/2006 08:50:09 PM
நல்லவேலை நான் உங்களை சந்திக்க வில்லை சந்தித்து இருந்தால் என்னையும் போட்டுடைத்திருப்பீர்கள்
சொன்னவர்: ENNAR | 9/25/2006 09:06:19 PM
முன்பொரு முறை மதுரை வருவதாகத் தொலைபேசியில் அறிவித்தவர். அப்போது தருமி ஐயா மதுரையில் இருப்பாரா அல்லது சென்னையில் இருப்பாரா என்று குழம்பியவர். ஆனால் மதுரை வரும் திட்டத்தை திடீரென கைவிட்டார்.
தற்போது புரட்டாசி 3ம் சனிக்கிழமை மதுரை வரத் திட்டமிட்டுள்ளார். இருப்பினும் அறிவித்துவிட்டால் முன்பு போலல்லாமல் சொல்லைக் காப்பாற்ற வேண்டுமே என்ற கவலையில் அறிவிப்பதா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கிறார்.
7ம் தேதி மதுரை வரத் திட்டமிருக்கும் இவர் காலையில் கள்ளழகர் கோவில் சென்றுவிட்டு, மாலையில் மீனாட்சி அம்மன் கோவில் செல்ல திட்டமிட்டுள்ளார். இடைப்பட்ட மதிய நேரத்தில் பதிவர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்யலாமா என்று யோசித்தும் வருகிறார்.
சொன்னவர்: Anonymous | 9/25/2006 09:21:05 PM
ஆனா நான் யாருன்னு சொல்ல மாட்டேனே.
சொன்னவர்: மோகன்தாஸ் | 9/25/2006 09:35:27 PM
சொன்னவர்: Rams | 9/25/2006 09:58:25 PM
ரகசியம்னா ரகசியம்தான் தருமிகிட்ட, தெரியுமா? அதனால உங்க பின்னூட்டத்தை முடக்கிவிட்டேன். மன்னிச்சுக்கங்க…சரியா?
சொன்னவர்: Dharumi | 9/25/2006 10:33:23 PM
சொன்னவர்: Dharumi | 9/25/2006 10:34:20 PM
சொன்னவர்: Dharumi | 9/25/2006 10:36:38 PM
டாக்டர்னா டாக்டர்தான்…எப்படி ஒரு ப்ளாஸ்த்ரி..நன்றி. இந்த ஓட்டு போடுறது இன்னும் இருக்கா என்ன..?
சொன்னவர்: Dharumi | 9/25/2006 10:38:11 PM
நெறையப் பேரச் சந்திச்சிருக்கீங்க. நானும் மதுரைக்கு வந்தா சந்திக்கிறேன். அப்ப என்ன போடுவீங்கன்னு யோசிச்சுப் பாக்குறேன்.
)))
பாபாவை நானும் நேரில் சந்தித்திருக்கிறேன்.
சொன்னவர்: G.Ragavan | 9/25/2006 11:04:51 PM
சொன்னவர்: குமரன் (Kumaran) | 9/26/2006 01:15:59 AM
ஓட்டெல்லாம் கட்டாயம் போட்டுரணும். கள்ள ஓட்டு காலமப்பா இது.
காசிக்கு போக ரூட் போட்டாச்சா?
சொன்னவர்: துளசி கோபால் | 9/26/2006 04:20:44 AM
//
அய்யா… தருமியாரே..
பா.க.ச மதுரை கிளை-1,ன் அமைப்பாளர் யாருன்னு தெரிஞ்சு போச்சு.
:-((((((((
அட!நீங்களுமா?
சொன்னவர்: யெஸ்.பாலபாரதி | 9/26/2006 01:20:17 PM
ஐந்து விரலும் சமனல்ல! என்பதை நிருபித்துள்ளார்கள். எனினும் ஞானவெட்டியான் ஐயாவின் உணவுமுறையைக் கடைப்பிடிக்கலாமா??என எண்ணவைத்தது. நன்றி
யோகன் பாரிஸ்
சொன்னவர்: Johan-Paris | 9/26/2006 03:42:00 PM
//நானும் மொத ஆளக் கண்டு பிடிச்சிட்டேன்.//
என்ன எல்லோருக் ஆளாளுக்கு இப்படி சொல்றீங்க…அவ்வளவு ஃபேமஸான ஆளா…லாஜிக் உதைக்குதே…அவ்வளவு ஃபேமஸான ஆளுக்கு எதுக்கு அப்புறம் முகத்திரையெல்லாம்…
சொன்னவர்: Dharumi | 9/26/2006 03:52:24 PM
நம்மப் பற்றி நாலு நல்ல வார்த்தை எழுதியதற்கு நன்றி. காசிக்குப் போகும்போது ஞாவகப் படுத்துங்கள்!
சொன்னவர்: ஞானவெட்டியான் | 9/26/2006 05:20:20 PM
இல்லங்கய்யா உங்களுடைய தொலைப்பேசி எண் தெரியாது. இந்த பின்னூட்டம் என்னுடைய மெயில் ஐடியுடன் வரும், அதில் ரிப்ளை செய்யவும்.
நீங்கள் மதுரையில் எந்த காலேஜ்,ஸ்கூல் டீச்சரு இல்லலே… உங்களைப் பார்த்த எங்க வாத்தியார் ஞாபகம்தான் வருது. அவரு காதை பிடிச்சு திருகி நச்சுன்னு தலையிலே வேற குட்டுவாரு…..
சொன்னவர்: ராம் | 9/26/2006 05:37:11 PM
படிக்க சுவாரசியமாக இருந்தது..
நன்றி
சொன்னவர்: Sivabalan | 9/26/2006 09:09:41 PM
எங்க வயசென்ன…உங்க வயசென்ன…கல்லப் போட்டாலும் செரிக்கிற வயசு..அதெல்லாம் மெல்ல பாத்துக்கலாம்.
சொன்னவர்: Dharumi | 9/26/2006 11:02:58 PM
//யாருன்னு சொல்ல மாட்டேனே. //
இது…
நல்ல பிள்ளை
சொன்னவர்: Dharumi | 9/26/2006 11:12:01 PM
//என்னையும் போட்டுடைத்திருப்பீர்கள் //
அய்யோடா! நான் என்ன அவர்களைப் போட்டுடைத்திருக்கிறேனா என்ன?
சொன்னவர்: Dharumi | 9/26/2006 11:13:23 PM
வரவேண்டும்…இந்த முறை நாம் கட்டாயம் சந்திக்கிறோம்.. சரியா ?
சொன்னவர்: Dharumi | 9/26/2006 11:15:07 PM
//அட!நீங்களுமா? // என்ன இப்படி சொல்லிட்டீங்க…இல்லாதது எதாவது சொல்லியிருக்கேனா என்ன?
சொன்னவர்: Dharumi | 9/26/2006 11:21:49 PM
(இந்தப் பெயரும் நல்லா இருக்கே!)
//அட!நீங்களுமா? //
என்ன நீங்க…அப்படி என்ன இல்லாதது பொல்லாதது ஏதாவது சொல்லிட்டேனா என்ன?
சொன்னவர்: Dharumi | 9/26/2006 11:23:08 PM
//நான் கூட உங்களை மாதிரிதான். தண்ணீர் பத்தியெல்லாம் அதிகமா எழுதுறது இல்லீங்க…
ஆமாங்க, நாம எல்லாம் ரொம்ப அடக்கமான ஆளுக இல்லியா..?
சொன்னவர்: Dharumi | 9/26/2006 11:24:20 PM
//படிக்க சுவாரசியமாக இருந்தது..//
நல்ல வார்த்தைக்கு நன்றி.
சொன்னவர்: Dharumi | 9/26/2006 11:27:52 PM
(இந்தப் பெயரும் நல்லா இருக்கே!)
//அட!நீங்களுமா? //
என்ன நீங்க…அப்படி என்ன இல்லாதது பொல்லாதது ஏதாவது சொல்லிட்டேனா என்ன?//
தருமி சார் பாபா என்றால் பாஸ்டன் பாலா அல்லவா?
சொன்னவர்: கால்கரி சிவா | 9/27/2006 12:01:38 AM
//
பாபா என்று பலருண்டு சிவாண்ணா.
பாலக்கரை பாலன் உதயகுமார் ஐயாவையும் பாபா என்று அழைப்பதுண்டு.
பால பாரதியும் பாபா ஆனால் தவறென்ன?
சொன்னவர்: குமரன் (Kumaran) | 9/27/2006 01:28:10 AM
என்னைக் குறிப்பிடுவது மாதிரியே உதயகுமாரையும் நீங்கள் ‘அய்யா’ என்று கூப்பிடுவது பார்த்த எனக்கு ஒரே ‘ஜாலி’!
சொன்னவர்: Dharumi | 9/27/2006 08:47:19 AM
தருமி ஐயா,
பதிவர் 1 & பதிவர் 2 யாருன்னு சொல்லவேயில்லையே? பதிவர் 1 தான் வெளிய சொல்ல மாட்டார். அதனால் அவரோட ரகசியத்தை நீங்களும் ரகசியமா வச்சுக்கலாம். பதிவர் 2மா?
எத்தனையோ பேர் பதிவர் 1 மாதிரி இருந்தாலும் நீங்க விவரிச்சிக்கிறதைப் பாத்தா யாருன்னு எனக்க்குத் தெரியும்னு தோணுது. ……?
சொன்னவர்: Dharumi | 9/27/2006 04:31:10 PM
அந்த முதல் பதிவர் யாருன்னு எனக்குத் தெரியுமே!….
சொன்னவர்: Dharumi | 9/27/2006 04:31:23 PM
சொன்னவர்: ராதாராகவன் | 9/27/2006 04:43:51 PM
பதிவர் 1 தான் வெளிய சொல்ல மாட்டார். பதிவர் 2மா?
//
குமரன், நீங்க முதல் பின்னூட்டத்தைப் படிக்கலியா? பதிவர் 2 ஒரு பெரீரீரீரீய :O (ஓட்டைவாய்)
தருமி,
இத்தனை கஷ்டப்பட்டு குமரன், செல்வன் பின்னூட்டத்தை எடுத்துப் போட்டிருக்கீங்களே, இதைப் பார்க்கலியா?
சொன்னவர்: பொன்ஸ் | 9/27/2006 04:54:29 PM
சொன்னவர்: பொன்ஸ் | 9/27/2006 04:55:54 PM
சொன்னவர்: குமரன் (Kumaran) | 9/27/2006 05:18:16 PM
நான் என்னவோ எந்தவொரு clue-வும் கொடுக்காதபடிதான் முதல் பதிவர் பற்றி செய்தி சொன்னேன். அவர் விரும்பும் ரகசியத்தைச் சபைக்குக் கொண்டு வரும் எண்ணம் சிறிதும் இல்லாமல், யாரும் கண்டுபிடிக்கமுடியாது என்ற நினைப்பில் எழுதினேன். ஒருவேளை எல்லா பதிவர்களும் என்னைப்போலவே மொடாக்குகளாக நினைத்து விட்டேன் போலும். பலர் இப்போது அவரை அடையாளம் கண்டதாகச் சொல்லும்போது அந்தப் பதிவர் என்மீது வைத்த நம்பிக்கைக்குத் துரோகம் செய்துவிட்டது போல் ஒரு குற்ற உணர்வு. இப்பதிவால் அவருக்கு ஏதும் மனக்குறை ஏற்பட்டிருப்பின் - அது என் அறியாமையால் விளைந்தது என்றாலும் - பொதுவில் அவரிடம் மன்னிப்பு வேண்டுகிறேன்.
சொன்னவர்: Dharumi | 9/27/2006 10:16:35 PM
//நல்லா தெரியற மாதிரி நாலு போட்டோ எடுத்துக்கிடத் தான்.. //
அட போங்க பொன்ஸ். இந்த மாதிரி ட்ரிக் போட்டோ எல்லாம் எங்கள மாதிரி ஆளுகளுக்காகவே உள்ள விஷயமாக்கும்.
இப்படி ஒரு பின்னூட்டம் முந்தியே போட்டேன்; என்ன ஆச்சுன்னே தெரியலை!
சொன்னவர்: Dharumi | 9/27/2006 10:43:42 PM
இது நீங்க திருத்திப் பார்ப்பதற்காக போடும் சோதனைப் பின்னூட்டம்
திருத்துற வழி தெரிஞ்சு போச்சுல்ல…ஆனா திருத்த மாட்டோமுல்ல..
சொன்னவர்: பொன்ஸ் | 9/29/2006 12:02:00 PM
ரொம்ப சுவாரஸ்யமா இருக்கே இந்த பின்னூட்டம் எல்லாம்!
நான் எதாவது எடுத்து உடவா?
அது இருக்கட்டும், இந்த புது லே அவுட் ரொம்பவே செமத்தியா இருக்கு சார்!!!
அட்டகாசம்!!
சொன்னவர்: Narayanaswamy.G. | 10/02/2006 11:47:57 PM
***
புனைப்பெயர்கள் வைத்திருப்பது வசதிதானே
)
***
சொன்னவர்: சோம்பேறி பையன் | 10/06/2006 12:20:27 PM
இயக்குஞர் மகேந்திரனை ஞாபகப்படுத்துகிறது…with no offense to you…புகைப்படம் எடுத்தவருக்கு எனது பாராட்டுதல்களை தெரிவிக்கவும்.
சொன்னவர்: PRABHU RAJADURAI | 10/06/2006 01:58:22 PM
//நானும் போட்டோவைப் பார்த்துதான், இரண்டு வார்த்தை சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்…அதற்குள் வேறு யாரோ சொல்லிவிட்டனர் போல:-)//
இப்படி ஒரு குரூப்பாவே அலைவீங்களா’ய்யா..?
//இயக்குஞர் மகேந்திரனை ஞாபகப்படுத்துகிறது…with no offense to you…//
மகேந்திரன் கேள்விப் பட்டு offense ஆக எடுக்காம இருந்தா சரி..
//புகைப்படம் எடுத்தவருக்கு எனது பாராட்டுதல்களை தெரிவிக்கவும்.//
கட்டாயமா..
சொன்னவர்: Dharumi | 10/06/2006 02:06:09 PM